தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை சிறப்பாக நடைபெற்றது.ஹஜ் பெருநாள் தொழுகை காலை 8.00 மணியளவில் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரிய பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது. அதன்பின் பெரிய பள்ளிவாசலில் பிறை கொடி ஏற்றி இறை முழக்கம் முழங்கப்பட்டது. வழுத்தூர் பெரிய பள்ளிவாசல் இமாம் துஆ ஒதி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஈத் முபராக் வாழ்த்துகளை தெரிவித்துக்க கொண்டனர்.
புகைப்பட உதவி
வழுத்தூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் ஹனபி பெரிய பள்ளிவாசல்- Facebook Page
வழுத்தூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் ஹனபி பெரிய பள்ளிவாசல்- Facebook Page
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........