மறைவு அறிவிப்பு...!

முஸ்லிம் லீக் முன்னோடிகளில் ஒருவரும் இதய வாசல் பத்திரிக்கையின் ஆசிரியரும் எழுத்தாளருமான அய்யம் பேட்டை மர்ஹூம் ஆலிமான் ராஜா முகம்மது அவர்களின் மகனுமான அய்யம்பேட்டை நகர முஸ்லிம் லீக் செயலாளர் ஆலிமான் ஜியாவுதீன் அவர்களின் உடன் பிறந்த அண்ணன் கவிஞர் இக்பால்ராஜா என்கிற முஹம்மது இக்பால் அவர்கள் இன்று 17-09-2016 அதிகாலை பண்டாரவாடையில் காலமாகிவிட்டார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்தனை செய்கிறோம். ஆமீன்!
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

Post a Comment

0 Comments