வழுத்தூர் கௌதியா நற்பணி மன்றம் மற்றும் தமிழக தர்ஹாக்கள் பேரவை தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளை சார்பாக மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது..!

 தஞ்சை மாவட்டம்  வழுத்தூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் ஹனபி பெரியபள்ளிவாசலில் வழுத்தூர் கௌதியா நற்பணி மன்றம் மற்றும் தமிழக தர்ஹாக்கள் பேரவை தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளை சார்பாக மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது
பெரிய பள்ளிவாசல் இமாம் மௌலவி K. நிஹ்மத்துல்லாஹ் ஹளரத் அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.
பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபையின் செயலாளர் ஹாஜி.எம் தாஜுதீன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கௌதியா நற்பணி மன்ற உறுப்பினர் அன்பு தம்பி S.சாதிக்குல் அமீன் வரவேற்புரையாற்ற சமுதாய நல ஆர்வலர் அல்ஹாஜ் M.J அப்துல் ரவூப் அவர்கள் தலைமையேற்று சிறப்பான முறையில் உரையாற்றினார்கள்
அதன்பிறகு தஞ்சையிலிருந்து வருகை புரிந்திருந்த ஆலிம் பெருந்தகை மௌலானா மௌலவி M.அப்துல் ரஜ்ஜாக் சூஃபி காதிரி ஹளரத் அவர்கள் விழா சிறப்புரையாற்றினார்கள்
உள்ளூர் வெளியூர் ஜமாத்தார்கள் மற்றும் சிறார்கள் என பலரும் திரளாக இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் நிகழ்ச்சியின் நிறைவாக கௌதியா நற்பணி மன்ற கௌரவ ஆலோசகர் A.முஹம்மது மஸ்தான் சாபு அனைவருக்கும் நன்றி கூற நிகழ்ச்சி யாவும் இனிதே நிறைவு பெற்றது.












Post a Comment

0 Comments