துபாய் – திருச்சி விமான சேவையில் இன்று(27/03/2016) முதல் நேர மாற்றம் - ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு !!!!

திருச்சி விமான நிலையத்தில் குளிர்கால மற்றும் கோடைக்கால அட்டவணைபடி விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்றுடன் குளிர் கால அட்டவணை முடிவுக்கு வந்து புதிதாக வெளியிடப்பட்டுள்ள அட்டவணப்படி இன்று நள்ளிரவு முதல் விமான சேவை செயல்படவுள்ளது.
துபாய் – திருச்சி ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாயிலிருந்து காலை 7:10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணிக்கு திருச்சிக்கு சென்றடைந்து பின்னர் மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு துபாய்க்கு வந்துக் கொண்டிருந்தது.
இன்று(27/03/2016) முதல் இந்த விமானம் துபாயிலிருந்து மாலை 6:25 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு சென்றடைந்து பின்னர் நள்ளிரவு 12.55 மணிக்கு புறப்பட்டு துபாய்க்கு காலை 3.45 மணிக்கு வந்து சேரும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments