இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்..!

வள்ளல் பி.எஸ்.ஏ அப்துல் ரஹ்மான் அவர்கள் வஃபாத்தானார்கள்.

சமுதாயத்தின்
கல்வி
பொருளாதாரம் வளர்ச்சி
வேலை வாய்ப்பு
இந்த மூன்று விசயங்களில் சிறப்பாக தனது பங்களிப்பை தமிழக முஸ்லிம்களின் வளர்ச்சிக்கு தந்தவர்..
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்தனை செய்கிறோம். ஆமீன்!
உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

Post a Comment

0 Comments