வழுத்தூர் ஊராட்சியின் அவலநிலை...!

 வழுத்தூர் ஊராட்சியின் இந்த ஜந்தாண்டு நிலைமை மிக மோசமாக சென்று கொண்டு இருக்கிறது. ஊராட்சியை மாதம் ஓரு முறை கூட சுத்தம் செய்ய ஆட்கள் வருவதில்லை. அங்கங்கே குப்கைகளும்,கழிவுகளுமாக வழுத்தூர் மிக மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் செளகத்துல் இஸ்லாம் (பா.மு.ச) தொடக்கபள்ளியின் பின்புறம். இங்கு குழந்தைகள் பள்ளிக்கு சென்றுவருவதால் ஈ,கொசு போன்றவைகள் மேய்ந்து கொண்டு இருப்பதால் குழந்தகைளுக்கு பலவகை நோய்கள் உண்டாக்ககூடும். இந்த செய்தியை் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் இரா.தமிழ்செல்வன் அவர்களிடமும், துணைத்தலைவர் காமலுதீன் அவர்களிடமும், பலமுறை எடுத்து சொல்லியும் சுத்தம் செய்ய ஆட்கள் வரவில்லை. இதற்க்கு என்ன தீர்வு...?
சமுதாய சிந்தனை உள்ள வழுத்தூர் வாசிகளே..! இதற்க்கு என்ன தீர்வு செய்யலாம் என்று COMMENTIL தெரிவியுங்கள்..

Post a Comment

0 Comments