வ்ழுத்தூர் மதரஸா பள்ளி இமாம் அவர்கள் உம்ரா பயணம் செல்ல இருக்கிறார.

 இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 16.12.2014 அன்று வழுத்தூர் மதரஸா பள்ளி இமாம் மௌலவி முஹம்மது ஆரிஃப் ஹஜ்ரத் அவர்கள் உம்ரா செல்ல இருக்கிறார்கள். அவர்களை கௌரவிக்கும் வகையில் இன்று 12.12.2014 வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்குப் பிறகு அவர்களுக்கு மதரஸா பள்ளியின் சார்பில் அதன் முத்தவல்லி ஹாஜி N.K.N. முஹம்மது ஜாஃபர் சாதிக் அவர்களும், ஜமாஅத் சார்பாக ஹாஜி M. முஹம்மது மஸ்தான் அவர்களும், ஹாஜி A. முஹம்மது அபூபக்கர் அவர்களும், மதரஸத்துல் ஹலிமிய்யா சார்பாகவும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. வழுத்தூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் ஹனஃபி பள்ளியின் உதவி முத்தவல்லி ஹாஜி N.P. முஹம்மது ஜாஃபர் அவர்கள் அறிவிப்பு செய்து பொன்னாடை அணிவித்தார்கள்.
ஹஜ்ரத் அவர்களின் புனித உம்ரா பயணம் இனிதாக அமைந்து, சிறப்பான முறையில் உம்ராவின் அனைத்து கிரியைகளையும் அல்லாஹ்விற்கும், உயிரிலும் மேலான கண்மணி ரசூலே கரீம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்்) அவர்களுக்கும் பொருத்தமான வகையில் நிறைவேற்றி அருள் சுமந்து நலமே தாயகம் திரும்ப வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
புகைப்படம் & செய்தி உதவி
mohamed jaffar sadique







Post a Comment

0 Comments