மிலாடி நபி பேரணி

மிலாடி நபி விழாவை முன்னிட்டு, சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை சார்பில் பேரணி நடந்தது. மிலாடி நபியை முன்னிட்டு, தமிழ்நாடு சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை சார்பில் சென்னையில் பேரணி நடந்தது. பொதுச் செயலர் மேலை நாசர் தலைமை வகித்தார். பேரணியை ஹசன் ஆரூண் துவக்கி வைத்தார். மண்ணடி அங்கப்பன் நாயக்கன் தெரு மசூதியில் துவங்கிய பேரணி, பிராட்வே சாலை, ஸ்டான்லி மருத்துவமனை வழியாக தங்கசாலை மணிகூண்டைச் சென்றடைந்தது. பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர். பேரணி முடிவில், தங்கசாலையில் மாநாடு நடந்தது. இதில் அமைச்சர் மைதீன்கான், ஜே.எம்.ஆரூண் எம்.பி., உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments