காதுகளுக்கு நேராக கைகளை உயர்த்துதல்:

நான் நபி(ஸல்) அவர்களுக்கு பின்னால் (நின்று) தொழுதேன், அவர்கள் தொழுகையை தொடங்கிய போது அல்லாஹ் அக்பர் என்று தக்பீர் கூறினார்கள். (அப்போது) தம் காதுகளுக்கு நேராக தம் கைகளை உயர்த்தினார்கள், பின்னர் அல்ஃபாத்திஹா அத்தியாத்தை ஓதினார்கள் என வாயில் பின் ஹிஜ்ர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்...நஸயி(ரஹ்)869)

..நபி(ஸல்)அவர்கள் தொழுகையை தொடங்கிய போது அல்லாஹ் அக்பர் என்று தக்பீர் கூறினார்கள். (அப்போது) தம் காதுகளுக்கு நேராக தம் கைகளை உயர்த்தினார்கள்.. என பாரப் பின் ஆஸிப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(இப்னு அபிஷைபா (ரஹ்) 2412)
நபி(ஸல்) தொழுகையில் தக்பீர் கூறுவார்கள், (அப்போது) தம் காது சோனைகளுக்கு நேராக கைகளை உயர்த்துவார்கள்....என அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(அபூயாலா(ரஹ்) 3735 , தப்ரானி(ரஹ்) 2/107, தாரகுத்னி(ரஹ்) 1135, இப்னு குத்மா(ரஹ்) 2/27).
தங்களது இரு காதுகளுக்கு சமமாக இரு கைகளையும் நபி(ஸல்) அவர்கள் உயர்த்தினார்கள் என மாலிக் பின் அல் ஹூவைரிஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (இப்னுமஜா(ரஹ்) 849,நஸயி(ரஹ்) 870)

நபி(ஸல்) அவர்கள் தம் இரு காது சோணைகளுக்கு சமமாக தம் கைகளை உயர்த்தியதை நான் பார்த்திருக்கின்றேன் என மாலிக் பின் அல் ஹூவைரிஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(நஸயி(ரஹ்) 871, முஸ்லிம்(ரஹ்) 642,அபூதாவுது(ரஹ்) 636, அஹமது(ரஹ்) 19626, தாரமி(ரஹ்) 1223).

Post a Comment

0 Comments