சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவையின் சென்னை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னை பாரிமுனை அருகே, 2வது லைன் பீச் ரோடில், சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவையின் சென்னை மாவட்ட அலுவலகம் நேற்று மாலை திறக்கப்பட்டது. ஐக்கிய பேரவையின் பொதுச் செயலர் மேலை நாசர் தலைமையில் நடந்த விழாவில், தமிழ்நாடு அரசு தலைமை காஜி டாக்டர் சலாவுத்தீன் முஹமது அய்யூப், அலுவலகத்தை திறந்து வைத்தார். பேராசிரியர் காதர் மொய்தீன், சிறுபான்மை சமூக புரட்சி இயக்கத்தின் தலைவர் லியாகத் அலிகான், தமிழ்நாடு தேசிய லீக்கின் பொதுச் செயலர் திருப்பூர் அல்தாப் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவையின் மாநில துணைத் தலைவர் ஜெய்னுதீன் ஹாஜியார் அனைவரையும் வரவேற்றார். அலுவலக திறப்பு விழாவை தொடர்ந்து மாலை நேரத் தொழுகையும், இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது.
- Home
- செய்திகள்
- _இந்தியா
- _தமிழ்நாடு
- _உலகச் செய்திகள்
- _Social
- _மாவட்டம்
- வழுத்தூர்
- _Vtr செய்திகள்
- _மறைவு அறிவிப்பு
- _கல்வி நிறுவனங்கள்
- __அலிஃப் ஸ்கூல்
- __செளகத்துல் இஸ்லாம்
- _Valuthoor Helping
- _திருமண விழாகள்
- Mega Menu
- தகவல்கள்
- _தகவல்கள்
- _கல்வி
- _மருத்துவம்
- _வேலைவாய்ப்பு
- _சமையல்
- ஆக்கங்கள்
- _Video
- _கவிதைகள்
- _கட்டுரைகள்
- _ஹதீஸ்கள்
- About Us
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........