சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை அலுவலகம் திறப்பு விழா

சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவையின் சென்னை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னை பாரிமுனை அருகே, 2வது லைன் பீச் ரோடில், சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவையின் சென்னை மாவட்ட அலுவலகம் நேற்று மாலை திறக்கப்பட்டது. ஐக்கிய பேரவையின் பொதுச் செயலர் மேலை நாசர் தலைமையில் நடந்த விழாவில், தமிழ்நாடு அரசு தலைமை காஜி டாக்டர் சலாவுத்தீன் முஹமது அய்யூப், அலுவலகத்தை திறந்து வைத்தார். பேராசிரியர் காதர் மொய்தீன், சிறுபான்மை சமூக புரட்சி இயக்கத்தின் தலைவர் லியாகத் அலிகான், தமிழ்நாடு தேசிய லீக்கின் பொதுச் செயலர் திருப்பூர் அல்தாப் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவையின் மாநில துணைத் தலைவர் ஜெய்னுதீன் ஹாஜியார் அனைவரையும் வரவேற்றார். அலுவலக திறப்பு விழாவை தொடர்ந்து மாலை நேரத் தொழுகையும், இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது.

Post a Comment

0 Comments