வழுத்தூர் நான்கு கொடி முஹையத்தீன் ஆண்டகை ஹந்துரி விழா..!

 அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹு..! 
தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் மஹ்பூபே சுபுஹானி மஃசூகே ரஹ்மானி மெய்நிலை கண்ட ஞானி கௌதுல் அஃலம் முஹையதீன் அப்துல் காதர் ஜீலானி (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களின் நினைவு நாள் கந்தூரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அஸர் தொழுகைக்கு பிறகு மெளலிது ஷரீப் ஓதப்பட்டது.மக்ரீப் தொழுகைக்கு பிறகு துவா ஓதப்பட்டு சுமார் 1500படி சாப்பாடு ஆக்கி வழுத்தூர் வாசிகளுக்கு மற்றும் ஏழைகளுக்கு தப்ருக் வழங்கப்பட்டது. பக்கீர்மார்களின் ராத்தீப்பு மஸ்லீஸ் உடன். நான்கு கொடி இரவு 10.00 மணிக்கு அரம்பமானது. நான்கு கொடியினை இளைஞர்கள் வழுத்தூர் உள்ள அனைத்து வீதிகளின் வழியாக சென்று சுமார் மதியம் 1.00 மணியளவில் நான்கு கொடி வழுத்தூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரிய பள்ளிவாசலில் வந்தடைந்தது. அதன்பின் கொடியினை ஏற்றி, பாத்திஹா ஓதி தப்ருக் வழங்கப்பட்டது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் மக்கள் அதிகமாக கலந்து கொண்டனர்.
நான்கு கொடி உண்டியல் வசூல் Rs.3,52,739..
இது கடந்த வருடத்தை விட அதிகம் 52,819 (2,95,920)
இந்த கந்தூரி விழாவின சிறப்பாக நடத்த உதவியாக இருந்த வல்ல இறைவனுக்கே எல்ல புகழும்..!
இன்ஷா அல்லாஹ் நான்கு கொடி முஹையத்தீன் ஆண்டகை ஹந்துரி விழா வீடியோ விரைவில்..!





































































Post a Comment

1 Comments

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........