பண்டாரவாடை புது ரோட்டில் சாலை விபத்து..!

 பாபநாசம் வட்டம் மேல வழுத்தூர் மேலத் தெருவில் வாசிக்கும் சந்தர் ராஜன் மனைவி சுசிலா வயது 56 மற்றும் மகன் விக்னேஷ் வயது 24 ஆகியோர் பாபநாசத்தில் இருந்து வழுத்தூரை நோக்கி பண்டாரவாடை புதுரோடு அன்னம் ஹோட்டல் அருகில்

 சென்றபோது மயிலாடுதுறை இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக சென்ற டெம்போ வேண் (TN-07/AM-7095) விக்னேஷ் ஒட்டி சென்ற டிஸ்கவரி பைக் ( TN-20/CZ-5304) மீது மோதியதில் நிலைதடுமாறி தஞ்சாவூர் இருந்து கும்பகோணம் நோக்கி  எதிரே அரசு பஸ்யில் (TN-68/N-0745) மோதி கீழே விழுந்த  போது  பஸ்சின் பின் சக்கரம் சுசிலா தலையில் ஏரியதில் சம்பவ இடத்திலேயே சுசிலா உயிரிழந்தார். இந்த விபத்தில் பைக் ஒட்டிய விக்னேஷ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.


தகவல் அறிந்து வந்த பாபநாசம் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து அங்கு கூடியிருந்த பொதுமக்கள் இந்த பகுதியில் அதிகமான விபத்துக்கள் நடைபெற்று கொண்டிருக்குது இதை தடுக்க வேக தடைகள் அமைக்கப்பட்ட வேண்டும் என்றார்கள்.



Post a Comment

0 Comments