உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடரும்..!

உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசும், திமுகவும் பதிலளிக்கும் படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடரும் என்றும், ரத்து செய்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
திமுக தொடர்ந்த வழக்கில் தமிழகத்தில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கில் 4 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், திமுகவுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments