யா அல்லாஹ்..! உனது புனித இல்லங்களை நீயே பாதுகப்பாயாக...!

 சவுதி அரேபியாவில் மதீனா உள்ளிட்ட 3 இடங்களில் அடுத்தடுத்து நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். 
.
இதைத் தொடர்ந்து, இரண்டாவது புனித தலமான மதீனாவில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் தனது உடலில் பொருத்தி இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தி உள்ளார். 
.
அதுபோல, கட்டிப் நகரிலும் மற்றொரு தீவிரவாதி வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி உள்ளார். சவுதி அரேபியாவின் கிழக்கே உள்ள ஷியா பிரிவினரின் மசூதி அருகே, தனது உடலில் பொருத்தி இருந்த வெடிகுண்டை தீவிரவாதி வெடிக்கச் செய்திருக்கிறார். இதில் அவரது உடல் சுக்கு நூறாக சிதறியது என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்து உள்ளார். ஆனால், அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
.
மதீனா நகரில் ராணுவ தலைமையகம் அருகே உள்ள மஸ்ஜித்-இ-நப்வி எனும் இடத்தில் இரண்டாவது தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதில் 3 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து, போர்க்களமாக காட்சியளித்தது. இந்த தாக்குதல்களில் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
.
Read more at: http://tamil.oneindia.com/…/saudi-cities-including-medina-h…

Post a Comment

0 Comments