வழுத்தூரில் மதரஸா பள்ளியில் புதிய ஹவுல் வளாகம் திறப்பு விழா நிகழ்வுகள்..!

 ஆசிக் முஹைதீன் முஹம்மது அபூபக்கர் அவர்களின் தாயார் அல்-ஹஜ்ஜா செ.இ.மு. ஜெய்புன்னிசா அபூபக்கர் அவர்களால் மதரஸா ஹவுல் வளாகம் கட்டிக்கொடுக்கப்பட்டு மேலும் மதரஸா வணீக வளாகத்தின் மறு சீரமைப்பு பணிகளை பூர்த்தி செய்து இன்று (14-06-2015) அன்று வக்பு செய்து கொடுக்கப்பட்டது.
மதரஸாப்பள்ளி ஹவுள் இன்று மாலை 06:00 மணியளவில் தர்ஹா பள்ளி இமாம் சித்தீக் ஹஜ்ரத் அவர்கள் கிராஅத் ஓத அய்யம்பேட்டை பி.எம்.ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையற்றி எனது தந்தை அல்ஹாஜ் A. முஹம்மது அபூபக்கர், அல்ஹாஜ் (வக்கீல்) முஹம்மது மஸ்தான் மற்றும் பள்ளிவாசல் முத்தவல்லி N.K.N. முஹம்மது ஜாபர் சாதிக் (பாப்ஜி) அவர்கள் முன்னிலை வகிக்க பி.எம்.ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்கள் அவ்ஜியை திறந்து வைத்தார்.
விழாவில் பஞ்சாயத்து தலைவர் ஹாஜி.லயன்.அ.பஷீர் அஹம்மது, O.P பசீர் அஹம்மது, M. A. தாஜுதீன், S.E.M.M. ஜாஃபர் சாதிக், சமுதாய ஆர்வலர் M.J. அப்துல் ரவூஃப், J.K.M. முஹம்மது ஜாஃபர் சாதிக் ஃபைஜி, RTTN. J.K.M. சபீர் அஹமது மற்றும் ஊர் ஜமாத்தார்கள் முஹல்லாவாசிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்.





Post a Comment

0 Comments