பிளஸ்–2 தேர்வு முடிவு நாளை வெளியீடு..!

பிளஸ்–2 தேர்வு முடிவு நாளை (வியாழக்கிழமை) வெளியாகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 5–ந் தேதி பிளஸ்–2 தேர்வு தொடங்கி மார்ச் 31–ந் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை 8 லட்சத்து 86 ஆயிரத்து 27 மாணவ–மாணவிகள் எழுதினார்கள்.
பிளஸ்–2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் 18–ந் தேதி முடிவடைந்தது. பின்னர் டேட்டா சென்டரில் கம்ப்யூட்டர் மூலம் மதிப்பெண் பதிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து மதிப்பெண்கள் சரியாக உள்ளனவா என்று ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்க்கப்பட்டு வருகிறது.
பிளஸ்–2 தேர்வு முடிவு நாளை (வியாழக்கிழமை) வெளியிடப்படும் என்று ஏற்கனவே பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் அறிவித்து இருந்தார். அதன்படி நாளை (வியாழக்கிழமை) முடிவு வெளியாகிறது. அதாவது கடந்த வருடத்தை விட 2 நாட்களுக்கு முன்பாக வெளியிடப்படுகிறது.
மாணவ–மாணவிகள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவின்போது மதிப்பெண்களும் தெரிந்துகொள்ளலாம்.

Post a Comment

0 Comments