தஞ்சை அருகே விபத்தில் 4பேர் உயிரிழப்பு

தஞ்சாவூர்- கும்பகோணம் நெடுஞ்சாலை இன்னும் எத்தனை உயிர்களை பலி வாங்க காத்து இருக்கிறது ???

தஞ்சாவூர் அருகே ஆம்னி வேன் மீது தனியார் பேருந்து மோதி விபத்தில் , 2 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 10 வயது சிறுமி உட்பட 3 பேருர் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல்லை சேர்ந்த 7 பேர் கும்பகோணத்திலுள்ள கோவிலுள்ள செல்வதற்காக ஆம்னி வேனில் சென்றுள்ளனர்.

அந்த வேன்‌ தஞ்சாவூர் அடுத்த மாத்தூர் அருகே சென்ற போது, கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த தனியார் பேருந்துடன் மோதியது. திருப்பங்கள் நிறைந்த அந்த சாலையில் வேகதடைகள் இல்லாததே தொடரும் விபத்துகளுக்கு காரணம் என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். வேகத்தடைகள் அமைக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments