பேரு வச்ச பிள்ளை..!

பேரு வச்ச பிள்ளை -எனக்கு 
சோறு வைக்க மறந்துட்டான்.

தாயா நினச்ச மவ
பேயா மாறிபுட்டா.... 

பெத்தெடுத்த புள்ளைங்களே
செத்து தொலைன்னு
சொன்ன பின்னே,

பேரன் பேத்தியும் என்ன
யாருன்னு கேட்க்குதுங்க???

வாழ வழியின்றி
வான்போல -ஒத்தையானேன்

சாக துணிஞ்சு இங்கே
கல்லறைக்கு வந்துபுட்டேன்
கணவனிடம் சொல்லிடவே...
- ரியாஸ் ஹக்கியுல் காதிரி

Post a Comment

0 Comments