இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் தஞ்சை மாவட்டத்தை பிரிக்க முடிவு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் தஞ்சாவூர் வடக்கு, தெற்கு என இரு மாவட்டங்களாகப் பிரித்து அமைப்பு குழு உருவாக்குவது என அக்கட்சியில் முடிவு செய்யப்பட்டது.
தஞ்சாவூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொதுக் குழு கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
மாநில முஸ்லிம் லீக் நிர்வாகக் குழுப் பரிந்துரையின்படி தஞ்சாவூர் வடக்கு, தெற்கு என இரு மாவட்டங்களாகப் பிரித்து அமைப்புக் குழு அமைப்பது, மாவட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் உறுப்பினர் சேர்க்கும் பணியைத் தீவிரப்படுத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் தலைவர் ஹமீது தலைமை வகித்தார்.

தேசிய பொதுச் செயலரும், மாநிலத் தலைவருமான காதர் மொகிதீன் சிறப்புரையாற்றினார்.
மாநில பொதுச் செயலர் முகம்மது அபூபக்கர், மாநில துணைத் தலைவர் நஸ்ருதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
http://www.dinamani.com/edition_trichy/tanjore/2014/08/31/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95/article2407292.ece

Post a Comment

0 Comments