புதிய கட்டிடம் கட்டி முஹையத்தீன் ஆண்டவர்கள் (ஹனஃபி) பள்ளிவாசலுக்கு வக்ஃப் செய்யப்பட்டது..!

வழுத்தூர் நரியுக்தி ஹாஜி Er. H.M. தாஜுதீன் B.E. அவர்களால் அவர்தம் தந்தை மர்ஹூம் நரியுக்தி ஹாஜா முஹைதீன் மற்றும் தாயார் மர்ஹூமா அமீர் பீவி அம்மாள் இவர்களின் நினைவாக ஒரு குடியிருப்பும், மனைவி மர்ஹூமா ஹாஜியா ஜுபைதா பேகம் அவர்களின் நினைவாக ஒரு குடியிருப்பும் கட்டப்பட்டு சென்ற 20.12.2013 அன்று துஆ ஓதி பால் காய்ச்சி கிரகப்பிரவேசம் நடைபெற்றது. ஜமாஅத்தார்களுக்கு இனிப்பு, காரம், தேனீர் வழங்கப்பட்டது. அக்குடியிருப்புகள் முறைப்படி முஹையத்தீன் ஆண்டவர்கள் (ஹனஃபி) பள்ளிவாசலுக்கு வக்ஃப் செய்து கொடுக்கப்பட்டது.

ஹாஜி Er. H.M. தாஜுதீன் B.E. அவர்கள் நல்ல ஆஃபியத்தோடு பல்லாண்டு வாழ வாழ்த்துவதுடன் அவர்களின் பெற்றோர் மற்றும் மனைவி இவர்களின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்கிறோம்.

ஹாஜி Er. தாஜுதீன் B.E. அவர்களுக்கு உளமார்ந்த நன்றியை பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.


நன்றி:
ஜாபர் சாதிக்










Post a Comment

0 Comments