பலத்த மழை எதிரொலி: தஞ்சை, திருவாரூர் – நாகையில் பள்ளிகளுக்கு இன்று (04-05-2013) விடுமுறை..!


பலத்த மழை எதிரொலி: தஞ்சை, திருவாரூர் – நாகையில் பள்ளிகளுக்கு இன்று (04-05-2013) விடுமுறை..!

தஞ்சை மாவட்டத்தில் இன்று 5–வது நாளாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு சற்று வெறித்து காணப்பட்ட மழை இன்று காலை முதல் மீண்டும் பெய்ய தொடங்கியது.

பலத்த மழை காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கலெக்டர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து நாகை கலெக்டர் முனுசாமி உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments