பசுபதிகோவில் பிரைமரி சார்பில் அடையாள அட்டை வழுங்கும் விழா மாவட்டச் செயலாளர் அ.பஷீர் அஹம்மது பங்கேற்றார்.

தஞ்சாவூர் மாவட்டம் பசுபதி கோவில் பிரைமரி முஸ்லிம் லீகின் கூட்டம் நகரத் தலைவர் அ.அப்துல் முத்தலீப் தலைமையில் நடைபெற்றது. ஜமாஅத் தலைவர் மெளலவி எம்.எஸ்.முஹம்மது அலி இறைவசனம் ஓத  நகரச் செயலாளர் என்.ஷேக் மீரான் அனைவரையும் வரவேற்றார. நகரச் பொருளாளர் ஹெச்.ருஹூல் ஹக் அஜ்மல் பஷீர் அஹம்மது முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் ஹாஜி லயன் பஷீர் அஹம்மது நகரத்தலைவர் உள்ளிட்ட 33 உறுப்பினர்களுக்கு தலைமை நிலையத்திலிடுந்து வழங்கப்பட்ட உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கி முஸ்லிம்லிகின் இளைஞர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் சிறப்புரை நகழ்த்தினர்..அத்துடன் அதிக உறுபினர்களையும் சேர்க்க முயற்சிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு பேசினார். 
விழாவில் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தானர்.

Post a Comment

1 Comments

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........