அலிஃப் மெட்ரிக் பள்ளியில் முப்பெரும் விழா..!

 அலிஃப் மெட்ரிக் பள்ளியில் முப்பெரும் விழா,மீலாது நபி விழா,அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் நடத்தும் "பிரிவுபச்சார விழா" பள்ளி தாளாளர் லயன்.அ.பஷீர் அஹம்மது தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் இளங்கோவன் அவர்கள் வரவேற்று பேசினார். விழாவில் மக்கி பைசல்,சமுதாய ஆர்வலர் எம்.ஜே.அப்துல் ரவூப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். திரு.சுப்பராமன் அவர்கள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு தேர்வினை எதிர் கொள்வது ஏப்படி..? என்ற அறிவுரை வழங்கினார்கள். ஆடுதுறை ஷாஜகான் அவர்கள் பஷீர் அஹமது அவர்களுக்கு ருகையா கல்வி அறக்கட்டளை சார்பில் "நற்குணசீலர் விருது" என்ற விருதினை வழங்கி பாராட்டுரை வழங்கினர்கள். மிலாது நபி விழா சிறப்புரையாக மெளலவி அல்ஹாபிழ் A.அஹ்மது ஜலாலுதீன் அவர்கள் நபிகளார் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதன்பின் இறுதி பேருரையாக பஷீர் அஹமது அவர்கள் உரையாற்றி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். இறுதியாக பள்ளியின் நிர்வாக இயக்குனர் B.முஹம்மது அஸ்லம் நன்றியுரை ஆற்றினார். விழாவில் பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தனார்.





























Post a Comment

0 Comments