போக்குவரத்து விதிமீறல் இனி தப்ப முடியாது; புதிய டெக்னாலஜி அறிமுகம்..!

 போக்குவரத்து விதிமீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்டை படம் பிடித்து வாகன ஓட்டிகளின் செல்போன் எண்ணுக்கு உடனுக்குடன் போக்குவரத்து சலான்கள் அனுப்பும் போக்குவரத்து தானியங்கி கட்டுப்பாட்டறையை காவல் ஆணையர் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னையில் 1.அண்ணாநகர் ரவுண்டனா, 2. அண்ணாநகர் காவல் நிலைய ரவுண்டனா, 3.சாந்தி காலனி சந்திப்பு, 4.100 அடி சாலை மற்றும் எஸ்டேட் சாலை சந்திப்பு, 5.மேற்கு டிப்போ மற்றும் 18வது சாலை சந்திப்பு ஆகிய 5 இடங்களில்  உள்ள  சிக்னல் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் மூலம் சிக்னலில் விதிமீறிச் செல்வோரின் செல்போனுக்கு அபராத ரசீது அனுப்பும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

எனவே இனி  போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் கண்டறியப்பட்டு, தானியங்கி கட்டுப்பாட்டறையில் உள்ள கணினி மூலம் மேற்படி வாகனங்களின் உரிமையாளர்களின் செல்போன் எண்களுக்கு தகவல் அளித்து, செலான் அனுப்பும் முறை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது இதன்மூலம், இனி சிக்னலில் விதிமுறைகளை மீறி யாரும் தப்ப முடியாது

இந்த தொழில்நுட்பம் அனைத்து சிக்னலிலும் விரிவுப்படுத்த வேண்டும் என்பதே அட்மின் மீடியாவின் எதிர்பார்ப்பு.

Post a Comment

0 Comments