சமூக வலைதளங்களில் போலி கணக்குகளை 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும் - மத்திய அரசு உத்தரவு

 சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் குறித்து புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் போலி கணக்குகளை நீக்க வேண்டும்' என்று சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் குறித்து, சம்பந்தப்பட்டவர்களோ அல்லது அவர்கள் சார்பாகவோ புகார் அளிக்கப்பட்டால், 24 மணி நேரத்திற்குள் அந்த போலி கணக்குகள் முடக்கப்பட வேண்டும்' என புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில் நடிகர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் உள்பட கோடிக்கணக்கான மக்கள் தங்கள் பெயரில் கணக்குகள் வைத்துள்ளனர்.

அத்தகைய பிரபலங்களின் கணக்குகளில் இருந்து புகைப்படங்களை எடுத்து, அவர்களின் பெயரில் போலியான கணக்குகளை துவங்கி பணம் கேட்டு மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.

இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப விதிகளில் புதிய உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. 

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் படி, போலி கணக்குகள் தொடர்பாக பயனாளர்கள் அல்லது அவரது சார்பில் யாரேனும் ஒருவர் புகார் அளித்த 24 மணி நேரத்தில் அந்த போலி கணக்குகளை நீக்க வேண்டும். என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Post a Comment

0 Comments