கிஷோர்.கே.சுவாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் மீது அவதூறு பரப்பிய வழக்கில் கைதான கிஷோர் கே.சாமி மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

கடந்த 13ஆம் தேதி முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோா் குறித்து அவதூறாக பல பதிவுகளை முகநூலில் பதிவிட்டதாக கிஷோர் கெ.சாமி மீது  திமுக-வைச் சேர்ந்த ரவிசந்திரன் என்பவர் அளித்த புகாரில் அடிப்படையில் கிஷோர் கே சுவாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த 14ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

இந்நிலையில், சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் அவர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments