கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடிக்கு விரைவில் அரசாணை அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி

 கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடிக்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில்  5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

இந்நிலையில்  இன்று மதுரையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர்,  கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார் 

Post a Comment

0 Comments