தற்காலிக சபாநாயகராக பேராசிரியர் ஜவாஹிருல்லா நியமனம் என்ற வதந்தியை நம்பவோ பரப்ப வேண்டாம்

மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் அறிக்கை

 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தொடரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் தற்காலிக சபாநாயகர் பொறுப்பு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களுக்கு வழங்கப்படுவதாக சமூக ஊடகங்களிலும் ஒரு சில பத்திரிகைகளிலும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல் ஆகும் தற்காலிக சபாநாயகர் பொறுப்பு பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களுக்கு வழங்கப்பட்டது என்ற செய்தி ஆதாரப்பூர்வமானது இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.  

இதுபோன்ற வதந்திகளை பரப்பவோ நம்பவோ வேண்டாம் என்ற மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
 ப அப்துல் சமது பொதுச்செயலாளர் 
மனிதநேய மக்கள் கட்சி

Post a Comment

0 Comments