இராஜகிரியில் தள்ளு முள்ளு..!

 *நேற்று (28-03-2019) இராஜகிரியில் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக பாசிச பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிக்க வந்திருந்தார்,அவர்களுடன் இராஜகிரியில் உள்ள அதிமுக பிரமுகர்களும் வாக்கு கேட்க வந்தனர்,அவர்களில் சிலர் இராஜகிரி பெரியபள்ளிவாசல் நிர்வாகத்திலும் உள்ளனர்*
*பாசிச பாஜக கூட்டணிக்காக அவர்கள் வாக்கு கேட்பதை பார்த்த இராஜகிரி இளைஞர்கள் கோபம் அடைந்தனர்*
*அதை தொடர்ந்து இன்று (29-03-2019) ஜும்ஆ தொழுகைக்கு பிறகு இராஜகிரி இளைஞர்கள் பெரியபள்ளி நிர்வாகத்தினரிடம் பாசிச கூட்டணியில் உள்ள அதிமுகவில் உள்ளவர்கள் பள்ளியின் நிர்வாகத்திலிருந்து பதவி விலகுமாறு கோரிக்கை வைத்தனர்*
*இளைஞர்கள்களின் கடும் எதிர்ப்பிற்கு பிறகு இராஜகிரி பெரிய பள்ளி நிர்வாகம் பாராளுமன்ற தேர்தலுக்கு முடிந்தவுடன் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபடுவார்கள் என்று சொன்னதற்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்*

 



Post a Comment

0 Comments