வழுத்தூரில் நாற்பெரும் விழா..!

இறையருளால்,05-11-2017 ஞாயிறு மாலை 5-00 மணியளவில்
சிராஜுல் மில்லத் தமிழ் இலக்கிய பேரவையின் ஆலோசனைக் கூட்டம் பேரவையின் மாநில தலைவர் லயன் ஹாஜி.A.பஷீர் அகமது தலைமையில் நடைபெற்றது.பேரவையின் மாநில பொருளாளர் K.Z.இனாயத்துல்லா வரவேற்புரை நிகழ்த்தினார்.கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம்: 1.
முஸ்லிம் லீக் மூத்த முன்னோடித் தலைவர் ஹாஜி.ஜம் ஜம் SM. பதுருத்தின் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து துஆ செய்யப்பட்டது.
தீர்மானம்: 2
இன்ஷா அல்லாஹ்
எதிர்வரும் டிசம்பர் மாதம் 09 ம் தேதி சிராஜுல் மில்லத் பிறந்த தின விழா, விருது வழங்கும் விழா, கவியரங்கம், மீலாது விழா ஆகியவற்றை மிகச் சிறப்பாக நடத்துவது .

தீர்மானம்: 3
மேற்படி விழாவினை ஒரு நாள் நிகழ்வாக தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் நடத்துவது
தீர்மானங்களை வலியுருத்தி திட்டச்சேரி கவிஞர் அன்வர்தீன் . வழுத்தூர் கவிஞர் J. முகைதீன் பாட்சா, முஹம்மது பந்தர் SD.அப்துல் ரஹீம், பேரவை மாநில துணை செயலாளர் இராஜகிரி0.A. ஹபீப் முகம்மது ஆகியோர் கருத்துரை யாற்றினர்
பேரவையின் மாநில துணைச் செயலாளர் LIC PA. ஹாஜா மைதீன் நன்றி கூறினார். துஆவுடன் கூட்டம் நிறைவு பெற்றது.நிகழ்வில் கீழ்கண்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்
OPA.பஷீர் அஹ்மது .SEM. முஹம்மது ஜாபர் சாதிக் . A.அப்துல் ஹக்கீம் . M. முஹம்மது காஸிம் . NPA. முஹம்மது ஜாபர் .VMA. ஹாஜா மைதீன் . J. தவ்பீக் அஹ்மது . B முஹம்மது இப்றாஹிம் யாஸீர். B. முஹம்மது அஸ்லம் . KM .முஹம்மது ஜபருல்லா . PM . கமாலுதீன் . D.தவக்கல் பாட்சா . M . முஹம்மது யூனூஸ் .




Post a Comment

0 Comments