தமிழகத்தில் துல்ஹஜ்  மாதம் ஆரம்பம்..!

பிறைதேட வேண்டிய நாளான இன்று  22.8.17 செவ்வாய்க்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு பிறை தென்பட்டதாக தமிழகத்தின் எந்த பகுதியிலிருந்தும் எந்த தகவலும் வரவில்லை.

பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபிமொழியின் அடிப்படையில் துல்கஃதா மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து 23.8.17 புதன் கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் துல்ஹஜ்  மாதம் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.

இன்ஷா அல்லாஹ் வரும் 1.9.17 வெள்ளிக்கிழமை அரஃபா நோன்பும் 2.9.17 சனிக்கிழமை ஹஜ்ஜூப் பெருநாள் ஆகும்.

Post a Comment

0 Comments