கியாமுல் லைல் தொழுகை நிகழ்வுகள்..!

 வல்ல இறைவனுக்கே எல்லா புகழும்..
வழுத்தூர் வரலாற்றில் முதல் முறையாக கியாமுல் லைல் தொழுகை ஆண்களுக்கும், பெண்களுக்கும் சிறப்பாக நடைபெற்றது..
வழுத்தூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற கியாமுல் லைல் தொழுகை நள்ளிரவு 2.00 மணி தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. தொழுகையினை ஹாபிஸ் ஹஜரத் ஜலலுதீன் அவர்கள், ஹபிஸ் ஹஜரத் அப்துல் காதர் அவர்கள் மற்றும் சக்கரப்பள்ளி அமீனா பள்ளிவாசல் இமாம் ஆகியோர் இரண்டு இரண்டு ரக்அத்துகளாக மொத்தம் எட்டு ரக்அத்துகள் வைத்தனர். தொழுகை சரியாக 3.00 மணிக்கு நல்துஆவுடன் நிறைவு பெற்றது.. தொழுகையில் ஆண்கள், பெண்கள் என்று சுமார் 200 நபர்கள் கலந்துக்கொண்டனர். தொழுகை முடிந்தவுடன் அனைவருக்கும் சஹர் உணவு பரிமாரபட்டது. விழாவின் ஏற்பாடுகளை வழுத்தூர் இளைஞர்கள் செய்து இருந்தனார். விழாவின் ஏற்பாடுகளை செய்த இளைஞர்களுக்கும், பண உதவி செய்த நல்லவர்களக்கும் வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக..!
ஆமின்..!
 










Post a Comment

0 Comments