வழுத்தூரில் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை.

தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை சிறப்பாக நடைபெற்றது.

ஹஜ் பெருநாள் தொழுகை காலை 8.00 மணியளவில் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரிய பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வழுத்தூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரிய பள்ளிவாசல் தஞ்சை மாவட்டச் செயலாளர் ஹாஜி.அ.பஷீர் அஹமது அவர்களின் தலைமையில் பிறை கொடி ஏற்றி இறை முழக்கம் முழங்கப்பட்டது. வழுத்தூர் பெரிய பள்ளிவாசல் இமாம் ஹப்பில்லாஷா துஆ ஒதி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் பிரைமரி செயலாளர் பீராலம் கமாலூதீன், பொருளாளர் அன்வர் பாட்சா, மாநில பொதுக்குழு உறுப்பினர் கமாலூதீன், பாபநசம் ஒன்றிய அமைப்பாளர் ஜ.தெளபீக் அஹம்மது, முஸ்லீம் மாணவர் பேரவை துணை அமைப்பாளர் ப.முஹம்மது அஸ்லம், ப.நஸ்ரத் இலியாஸ் அஹம்மது மற்றும் ஏராளமான ஜமாத்தார்கள், இளம்பிறை நெஞ்சங்கள், இளைஞர் லீக் செயல் வீரர்கள், மாணவர் பேரவை செயல் வீரர்கள் திரளாக கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஈத் முபராக் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

Post a Comment

0 Comments