விஸ்வரூபம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிலைபாடு கூத்தாநல்லூர் மீலாது விழாவில் அப்துல் ரஹ்மான் எம்.பி. விளக்கம்


இன்று கூத்தாநல்லூரில் நடைபெற்ற மீலாது விழாவில் கலந்து கொண்ட முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் விசுவரூபம் திரைப்படம் குறித்த அக்கட்சியின் நிலைப்பாட்டை விளக்கினார்.

முஸ்லிம்களின் உயிர் மூச்சான புனித குர்ஆனையும்,தீவிரவாத போக்கினையும் இணைத்து ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமே தீவிர வாதத்துக்கு துணை நிறகக்கூடியதைப் போன்ற காட்சிகளையே பரவலாகக் கொண்டிருக்கும் விஸ்வரூபம் படம் தடை செய்யப்பட வேண்டும் என்பதில் முஸ்லிம் லீக் தனது உறுதிப்பாட்டை தெரிவிக்கின்றது.

நம்முடைய எதிர்ப்பை மிக அழுத்தமாக தெரிவிக்கும் பொருட்டு தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் திர்.ராஜகோபால் அவர்களை
தொடர்பு கொண்டு நம்முடைய கண்டனத்தை தெரிவித்திருக்கின்றோம்.
சமுதாயத்தின் பல்வேறு அமைப்புகளும் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை தெரிவித்திருக்கின்றன.


தமிழக அரசு 15 நாட்களுக்கு தடை விதித்திருப்பது சற்று ஆறுதலை தந்தாலும்,இந்த படத்தை வெளியிடாமல் முற்றுலுமாக தடை செய்ய வேண்டும் என்பதே முஸ்லிம் லீகின் நிலைபாடு.
வருகிற 28-ம் தேதி வெளியிடப்ப்ட இருக்கின்ற நீதிமன்ற தீர்ப்பும் இதே அடிப்படையிலான நியாமுள்ள தீர்ப்பாக இருக்குமென எதிர்பார்க்கின்றோம்.
இந்த திரைப்படம் வெளிவந்தால் சட்டம் ஒழுங்கு நிச்சயமாக கெடும் என்கிற அச்சப்பாடு நிலவி வருவதை அரசாங்கமும் நீதிமன்றமும் கருத்தில் கொள்வது இன்றியமையாதது.

திரைப்படங்கள் இஸ்லாமிய மார்க்கத்தை மாத்திரமல்ல எந்த மத உணர்வையும் புண்படுத்தக்கூடிய வகையில் இருக்கக் கூடாது.
என்கிற முஸ்லிம் லீகின் நிலையை எல்லாத் தளங்களிலும் பதிவு செய்தே வருகிறோம்.
மதமாச்சரியம் இல்லாமல் திரைப்படங்களை தயாரிப்பவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இந்த வரையரையை மீறிய காரணத்தினால் தான் விஸ்வரூபம் படம் கடும் எதிர்ப்பினை சந்தித்திருக்கிறது.இந்த எதிர்ப்பு தார்மீக நிலையில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணத்தினால் தான் தமிழக அரசும் உடனடியாக 15 நாட்கள் தடை விதிக்க முன் வந்திருக்கிறது.
இந்தத் தடை தற்காலிகமாக இல்லாமல் நிரந்தரமானதாக ஆக்கப்பட வேண்டும் இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்கக் கூடிய சூழ்நிலையைஉண்டாக்கி விடுமோ என்கிற அச்சம் நிலவுவதை மறுப்பதற்கில்லை,ஆகவே அரசாங்கமும் நீதிமன்றமும் மக்களிம் உணர்வுகளை மதித்து விஸ்வரூபம் படத்தை தடை செய்வதில் எந்த தயவு தாட்சண்யும் காட்டக்கூடாது என்பதை மாத்திரம் இப்போதைக்கு சொல்லி வைக்கிறோம் என்று குறிப்பிட்டார்.
 

Post a Comment

0 Comments