மூன் தொலைக்காட்சி `இன்றைய இந்தியா நிகழ்ச்சி மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பங்கேற்பு

மூன் தொலைக்காட்சியில் வாரம் ஒருமுறை `இன்றைய இந்தியா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த வாரம் இந் நிகழ்ச்சி `வதம் தரும் வதந்திகள் எனும் தலைப்பில் அஸ்ஸாம் கலவரம் மற்றும் ஈத் பெருநாளில் மருதாணியால் ஏற்பட்ட வதந்தி குறித்து கலந்துரையாடல் இடம் பெறுகின்றது. 

முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச் செயலாளர் பேராசிரியர் சேமுமு. முஹம்மதலி நடத்தும் நிகழ்ச்சியில் இந்த வாரம் இந்திய யூனியன் முஸ்லிம் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வீ. பாலு ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிகழ்ச்சி இன்று வெள்ளிக் கிழமையும் (24-8-2012) ஞாயிற்றுக்கிழமை 26-8-2012 அன்றும் இரவு 7.10 மணி முதல் 8 மணி வரை `மூன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றது.

Post a Comment

0 Comments