பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலை வாய்ப்பக இணையதளத்தில் பள்ளியிலேயே பதிவு செய்ய ஏற்பாடு

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பள்ளி வளாகங்களிலேயே �இணையதளம்� மூலமாக பதிவு செய்ய பள்ளிக் கல்வித் துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ் பெறும் நாளிலிலேயே அவர்களது கல்வித்தகுதியியை தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, வேலைவாய்ப்பக இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை செய்துள்ளன.
மாணவ, மாணவிகள் மதிப்பெண் சான்றிதழ் பெற பள்ளிக்கு செல்லும்போது குடும்ப அட்டை மற்றும் சாதி சான்றிதழை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். 10ம் வகுப்பு கல்வித் தகுதியினை ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டையையும் உடன் எடுத்து செல்ல வேண்டும். புதிதாக பதிவு செய்ய விரும்புவோருக்கு புதிய பதிவு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை பதிவு செய்யும் நாளிலேயே உடனுக்குடன் வழங்கப்படும்.
மாணவ, மாணவியர் மாற்றுத் திறனாளிகளாக இருப்பின் தங்களுடைய கல்வித் தகுதியை பள்ளிகளில் பதிவு செய்த பின்னர், தங்களுடைய முன்னுரிமையை வேறு ஒரு வேலை நாளில் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் 30.05.2012 அன்று பள்ளிக் கல்வித் துறையினரால் வழங்கப்படவுள்ளது. 30.05.2012 முதல் 13.06.2012 (15 நாட்களுக்குள்) அந்தந்த பள்ளிகளிலேயே மாணவ மாணவியர் பதிவு செய்து வேலைவாய்ப்பு அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு பதிவு செய்யப்படும் மாணவ, மாணவியருக்கு பிளஸ் 2 கல்வித் தகுதிக்கு 30.05.2012 தேதியிட்ட பதிவு மூப்பு வழங்கப்படும்.

Post a Comment

0 Comments