இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலா ளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மதுரை பிரசிடெண்ட் ஓட்டலில் செய்தியாளர்களுக்கு பேட்டி.

முதல்வர் ஜெயலலிதாவின் 64-வது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ளோரை விடுதலை செய்ய வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் பேராசிரியர் பேட்டி 


தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையாரின் 64வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகி தீன், அவரது பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளோரை சாதி, மத, வழக்கு வேறுபாடின்றி விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள் ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலா ளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மதுரை பிரசிடெண்ட் ஓட்டலில் செய்தியாளர்களுக்கு பேட்டிய ளித்தார்.

அப்போது அவர் குறிப்பிட் டதாவது-

தமிழக முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதா அவர்க ளின் 64-வது பிறந்த நாள் வரும் 24-ம் தேதி வருகிறது. அவருக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித் துக் கொள்கிறேன்.


இந்த பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு நான் ஒரு கோரிக்கை விடுப்பதற்கு கடமைப்பட்டிருக்கிறேன்.

நீண்ட காலம் சிறையில் தண்டனை அனுபவிக்கின்றவர் கள் தமிழகத்தின் மத்திய சிறை களில் ஆயிரக்கணக்கில் உள்ள னர். 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவிப்பவர்கள் 400 பேருக்கு மேல் உள்ளனர். 12 ஆண்டுகளுக்கு மேல் சிறை வாசம் அனுபவிப்பவர்கள் 250 பேருக்குமேல் உள்ளனர். 14 ஆண்டுகளையும் தாண்டி இன்று பலர் சிறைவாசம் அனு பவித்துக் கொண்டிருக்கின்ற னர்.

முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த வர்களையெல்லாம் விடுதலை செய்ய வேண்டும். அதில் சாதி, சமயம், வழக்குகள் என்ற வித்தி யாசமெல்லாம் பார்க்காமல் இந்த விடுதலை அமைய வேண்டும்.

கடந்த காலங்களில் செல்வி ஜெயலலிதா அம்மையார் முதல்வராக பொறுப்பேற்ற போது, பல முறை தனது பிறந்த தினத்தை முன்னிட்டு சிறை வாசிகளை விடுதலை செய்தி ருக்கிறார். அவரது 64-வது பிறந்த நாளிலும் விடுதலை செய்ய வேண்டும் என்ற அவாவை நாங்கள் வெளிப் படுத்துகிறோம்.

பள்ளிவாசல், கபரஸ்தான்களுக்கு பட்டா

அரசியல் நாகரீகத்தோடு பிரச்சினைகளை அணுகக் கூடியவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகர்கள். நன்மைகளை பாராட்டுவதும், குறைகளை சுட்டிக் காட்டுவதும், சமுதாயத் தேவைகளுக்கு குரல் கொடுப்ப தும் எங்கள் கடமை.

அண்மையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலாஸ் மாளிகை தீப்பிடித்து சேதம் அடைந்த போது அதை இடித்து தரை மட்டமாக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதைப் பாதுகாத்து புதுப்பித்து கலாச்சார சின்னத்தை காப் பாற்ற வேண்டும் என ஆற்காடு இளவரசரும், நாங்களும் கோரிக்கை வைத்தோம். அந்த கோரிக்கை ஏற்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தோம்.

அதேபோன்று தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக் குழு கூட்டத்தில், பள்ளிவாசல்கள், கபரஸ்தான்கள், தர்காக்க ளுக்கு இதுவரை பட்டா வழங் காமல் இருந்தால் உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம்.

எங்கள் கோரிக்கை ஏற் கப்பட்டு தமிழக அரசு நில நிர்வாக ஆணையர் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர்க ளுக்கு இதுபற்றி தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டுள்ளது. அதற்கு எங்களு டைய நன்றியை தெரிவித் தோம்.

அரசியல் நாகரீகம் கருதி பிறந்த நாள்வாழ்த்தும், கோரிக் கைகளும் தெரிவிப்பது எங்களது கடமை.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் அமோக ஆதரவுடன் அவர் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தார். அவரை ஆதரித்த மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் அந்த எதிர்பார்ப்புகளுக்கு மாற்றமாக பால் விலை, பேருந்து கட்டண உயர்வுகள், வரலாறு காணாத மின்வெட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்குபிரச்சினைகள் இன்று தமிழகத்தை வாட்டி எடுத்துக் கொண்டிருக்கின்றன.

சிறந்த நிர்வாகி அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திப்பான் என்பதும், சிறந்த அரசியல்வாதி அடுத்த தேர்தலை பற்றி சிந்திப்பான் என்றும் சொல்லப்படும். இப் போது நம்முடைய தமிழக முதல்வர் அடுத்த தலை முறையை பற்றி சிந்திக்காமல் அடுத்த தேர்தலை பற்றி சிந்தித்து நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம் என்று சொல்லி வருகிறார். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்று கிற வகையில் அவரது ஆட்சி அமைய வேண்டும்.

தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் மார்ச் 1 முதல் செயல் படும் என மத்திய அரசு அறி வித்துள்ளதற்கு 11 மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.

தனி மனித உரிமை, மாநில உரிமை என மக்கள் விழிப்ப டைந்துள்ள இக் காலகட்டத்தில் அதிலும் குறிப்பாக தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் தங்களுடைய உரிமைகளை மக்கள் நிலைநாட்டி வரும் காலச் சூழ்நிலையில் மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் அதன் உரிமைகளில் தலையிடக் கூடிய சட்டங்களை அறிமுகப்படுத்தக் கூடாது என்பதே இந்திய யூனி யன் முஸ்லிம் லீகின் நிலைப் பாடு. திருமண பதிவில் `மதம்� கட்டாயம் வேண்டும் திருமண பதிவின் போது மதம் என்பது இனி குறிப்பிடப்பட மாட்டாது என அறிவிக்க சட்ட அமைச்சகம் முடிவெடுத்துள்ள தாக `டெக்கான் கிரானிக்கல்� என்ற ஆங்கிலப் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு திருமணத்திலும் மணமகன், மணமகள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என் பது நிச்சயம் குறிப்பிடப் பட்டே ஆக வேண்டும். மதம் குறிப் பிடக்கூடாது என்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம்.

சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் திராவிட முன்னேற் றக் கழகத்தை ஆதரிப்பது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முடிவெடுத்துள் ளது. 15-ம் தேதி கலைஞர் பங்கேற்கின்ற கூட்டத்தில் நானும் பங்கேற்க உள்ளேன். அதற்கு முன்னதாக தலைமை நிலையத்திலிருந்து எங்களு டைய நிர்வாகிகள் பரப்புரை செய்ய இருக்கிறார்கள்.

தி.மு.க.வை நாங்கள் ஆதரிப்பதற்கான காரணம் அரசியல்ரீதியானது அல்ல; அதுகொள்கைரீதி யானது. பல விஷயங்களில் எங்களோடு தி.மு.கழகம் ஒத்து போகிறது. ஆகவேதான் இந்த கூட்டணி தொடர்கிறது.

மராட்டிய மாநகராட்சிகளில் இ.யூ. முஸ்லிம் லீக் வெற்றி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய அளவில் இன்று மிகச் சிறப்பாக செயல்படுகிறது. அனைத்து மாநிலங்களிலும் ஒரே பெயரில் இது இயங்கும். இதற்கான தேசிய நிர்வாகிகள் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

வடஇந்திய தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனி சின்னத்தில் தனித்து போட்டியிடுகிறது. அண்மையில் நடைபெற்ற மகாராஷ்டிர மாநில உள்ளாட்சித் தேர்தலில் நாக்பூர், அமராவதி ஆகிய மாநகராட்சி களில் 4 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது.

Post a Comment

0 Comments