பால்விலை - பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து நவ.23-ல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாட்டில் பால் விலை மற்றும் பேருந்து கட்டணம் மிகக் கடுமை யான அளவில் உயர்த்தப் பட்டுள்ளது. அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பால் ரூ.17.75 லிருந்து ரூ.24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சில்லறை வணிகர்கள் எத்தகைய முன்னறிவிப்பும் இன்றி மனம் போன போக்கில் விலை நிர்ணயம் செய்து விற்கத் தொடங்கி விட்டனர். பால் விலை உயர்வையடுத்து உணவு விடுதிகளிலும், தெருவோர தேநீர் விடுதிகளிலும் டீயின் விலை கணிசமாக உயர்த் தப்பட்டுள்ளது. 

பேருந்து கட்டணம் 80 சதவீதம் வரை உயர்த் தப்பட்டுள்ளதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் மிகப் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர். சில இடங்களில் இந்த உயர்வு 100 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியிடப் பட்ட அன்றைய தினம் இரவு முதல் முன்னறிவிப் பின்றி விலை உயர்வு அமல்படுத் தப்படுத்தப் பட்டதால் வேலைவாய்ப் புகளுக்காக சென்றிருந்த ஏழை கூலித் தொழிலாளர் கள் பணமின்றி தவித்தது மிகப் பெரும் விமர்சனத்திற் குள்ளானது. 

மக்களை நேரடியாக பாதிக்கும் இந்த விலை உயர்வு போதாது என்று மின் கட்டணத்தையும் 50 சதவீதம் வரை உயர்த்த மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்துக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.


இந்த கட்டண உயர்வு களை திரும்பப் பெறக் கோரி தமிழகம் முழுவதும் பொது மக்கள் போராட் டம் நடத்தி வருகின்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் உயர்த் தப்பட்டுள்ள பால்விலை மற்றும் பேருந்து கட்டண உயர்வு திரும்பப் பெறக் கோரியும், மின் கட்ட ணத்தை உயர்த்தக் கூடாது என வலியுறுத்தியும் வரும் 23-ம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிமுதல் 11.30 மணி வரை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகில் ஆர்ப்பாட் டம் நடைபெறுகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசி ரியர் கே.எம். காதர் மொகி தீன் தலைமையில் நடை பெறும் இந்த ஆர்ப்பாட் டத்தில் மாநில பொதுச் செயலாளர் கே..எம். முஹம்மது அபூபக்கர், பொருளாளர் எம்.எஸ்.. ஷாஜஹான் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல் வீரர்கள், முஸ்லிம் மாணவர் பேரவை, இளைஞர் அணி, உள்ளிட்ட அமைப்புகளைச்சார்ந்த தொண்டர்கள் அனைவ ரும் வருகை தருமாறு அன்புடன் கேட்டுக் கொண் டுள்ளது…….

Post a Comment

0 Comments