தற்போது நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரானா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்தது முதல் இதுவரை கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாமல் இருந்தது. மேலும், கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.ஆய்வின் முடிவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் கர்ப்பிணி பெண்களுக்கு எந்தவித பக்க விளைவும், சோர்வும் இருக்காது என்று தெரியவர, எய்ம்ஸ் மருத்துவ குழு, கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
அதன்படி கர்ப்பிணி பெண்களும் இனி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை மத்தியஅரசு சற்று முன் வெளியிட்டுள்ளது.
மேலும் கோ-வின் செயலில் பதிவு செய்தோ அல்லது அருகில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்றோ கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
Source:
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........