தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி /
பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளை படித்து
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல்
வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
மாற்றுதிறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டுகளுக்கு
மேல்
வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க தகுதி:
விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர் 40 வயதுக்குட்பட்டவராகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரியாதவராவும், சுய வேலைவாய்ப்பில் ஈடுபடாமல் இருப்பவராகவும் இருத்தல் வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருப்பவரா இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர் பள்ளி, கல்லூரி படிப்பினை தமிழ்நாட்டிலேயே முடித்திருக்க வேண்டும்
இத்திட்டத்தின்
கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72,000/-ஆகும்.
அரசு மற்றும் பிற வகைகளில் எந்தவித நிதி உதவியும்
பெற்றிருக்கக்கூடாது. பள்ளி/கல்லூரியில் சென்று படிப்பவராக இருக்கக்
கூடாது.
உதவி தொகை எவ்வளவு:
,
பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ. 200,
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 300,
12-ஆம் வகுப்பு, பட்டய வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 400,
பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 600
மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்
ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் விவரங்களுக்கு:
https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2021/07/2021070883.pdf
குறிப்பு:
இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது எனவே உங்கள் மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தினை தொடர்பு கொண்டு விண்ணப்பியுங்கள்
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........