தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். அவர்கள் நியமனம்
தற்போதைய சட்டம் ஒழுங்கு டிஜிபி நாளையுடன் ஓய்வு பெறுவதால் தற்போது தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். அவர்கள் நியமிக்கபட்டுள்ளார்.
புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு 1987 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார் மேலும் தற்போது ரயில்வே டிஜிபியாக பதவி வகிக்கிறார்.
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியை முடிவு செய்வதற்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இதில் தமிழக அரசு சார்பில் அளித்த பட்டியலில் இருந்து தற்போது புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு ஐபிஎஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். அவர்கள் பற்றி சிறு குறிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பு முடித்து, மதுரையில் அமைந்துள்ள விவசாயப் பல்கலைக்கழகத்தில், விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
கோயம்புத்தூர் விவசாயப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருந்தாலும், பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொதுச்சட்டம் இளங்கலை பட்டமும் மக்கள் தொகை கல்வியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் அவருடைய "Missing Children" ஆய்வறிக்கைக்காக முனைவர் பட்டம் பெற்றார். 2013 ஆம் ஆண்டில் மனித வள வணிக நிர்வாக படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றார்
இந்தியக் காவல் பணி அதிகாரி ஆக (IPS) பணியில் சேர்ந்த சைலேந்திர பாபு அவர்கள் ஐதராபாத் தேசிய காவல் அகாடமி மூலம் பயிற்சிப் பெற்றார்.
எழுதிய நூல்களில் சில:
நீங்களும் இந்தியக் காவலர் பணியாளர் ஆகலாம்.
Boys & Girls - Be Ambitious
Principles of success in interview
உடலினை உறுதி செய்
அமெரிக்காவில் 24 நாட்கள்
நீங்களும் ஐ பி எஸ் அதிகாரி ஆகலாம்
சாதிக்க ஆசைப்படு
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........