சென்னை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் நூதன முறையில் திருட்டு நடைபெற்றதை தொடர்ந்து டெபாசிட் வசதியுடைய ஏடிஎம்-களில் பணம் எடுக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில்
உள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் மர்ம கும்பல் நூதன முறையில்
திருடியுள்ளது. கடந்த 19 மற்றும் 20ஆம் தேதிகளில் இவர்கள் சென்னை
முழுவதும் பல் இடங்களில் ஏடிஎம்மில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்டேட்
பேங்க் ஏடிஎம்மின் டெபாசிட் இயந்திரத்தை மட்டுமே குறிவைத்து கொள்ளை
சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டிருப்பதால் அதில் பணம் எடுக்க தற்காலிகமாக தடை
விதிக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.ஐ.யின் பணம் டெபாசிட் செய்யும் எந்திரங்களை குறிவைத்து ஒரே பாணியில்
பணம் திருடப்பட்டுள்ளது. வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம். கார்டு மூலம்
பணத்தை எடுக்க பொத்தான்களை அழுத்தியுள்ளனர்.
பணம்
வந்ததும் அதை எடுத்துக்கொள்கின்றனர். அதேசமயம், பணம் வெளிவரும் பெட்டியின்
மூடியை மூடிக் கொள்ளாமல் பிடித்துக் கொள்கின்றனர். இதனால் பணத்தை
எடுக்கவில்லை என கருதி இயந்திரம் கணக்கிலிருந்து பணத்தை கழித்துக்
கொள்ளாது. இப்படியாக பலமுறை நூதன திருட்டை செய்துள்ளனர்.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........