புதுச்சேரியில் தளர்வுகளுடன் வரும் 30 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு !

 புதுச்சேரியில் கொரொனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால்  ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி  புதுவையில் தளர்வுகலுடன் ஊரடங்கை 30 ஆம் தேதி வரை அரசு அமல்படுத்தியுள்ளது. 

  • கடற்கரை சாலை, பூங்காக்களில் காலை 5 மணி முதல் காலை 9வரை நடைபயிற்சி மேற்கொள்ளலாம் 

  • திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்

  • சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகளில் 100 பேர் வரை கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

  • அனைத்து தனியார் அலுவலகங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

  • போக்குவரத்துக்கு காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
  • இறுதிச் சடங்கில் சுமார் 20 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. 

  • மதுபானக்கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments