செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ள தனமாக மதுபான விற்பனை, கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை, மணல் கொள்ளை, சூதாட்டம் மற்றும் கள் இறக்குதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை பற்றி தகவல் தெரிவிக்கலாம்  என செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் அறிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளதனமாக மதுபான விற்பனை. கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை. மணல் கொள்ளை, சூதாட்டம் மற்றும் கள் இறக்குதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை பற்றி தகவல் தெரிவிக்க செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி கண்காணிப்பில் “HELLO POLICE" என்ற ஒரு புதிய கைப்பேசி எண் பொதுமக்களுக்காக அறிமுகப்படுத்தப்படுகிறது. 
பொதுமக்கள் 7200102104 
என்ற கைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு அல்லது SMS/Whatsapp மூலமாகவும் மேற்படி குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர்களை பற்றி தகவல்களை தெரிவிக்கலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 
தகவல் அளிப்போரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும்.
 
 
   
 
 
 
 
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........