தேர்தல் வெற்றி - ஊர்வலம், பட்டாசு வெடிக்க தடை - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் தேர்தல் வெற்றியை தொடர்ந்து ஊர்வலம், பட்டாசு வெடிக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் நடைபெற்றது. 

இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 2 ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. 

மே 2ம் தேதி, வாக்கு எண்ணிக்கையன்று பட்டாசுகள் வெடிக்க கூடாது, வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட கூடாது மற்றும் ஊர்வலம் போன்றவைகள் நடத்தக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 
மேலும், கொரோனா பரவலை தடுக்க அரசு அறிவித்துள்ள விதிகளை அனைத்து கட்சியினரும் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments