இராஜகிரி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி- அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்..!

தஞ்சாவூர் மாவட்டம். பாபநாசம் சட்டமன்றத் தொகுதி,
இராஜகிரி ஊராட்சியில் பெரிய பள்ளிவாசல் அருகில் கடைகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன என தகவலறிந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் மாண்புமிகு. இரா. துரைக்கண்ணு பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 10,000/- வீதம் மூன்று கடை உரிமையாளர்களுக்கு கொடுக்கப்பட்டது.மேலும் அவர் அவர்களுக்கு உரிய கடனுதவி வழங்க மாவட்ட ஆட்சியர் உயர்திரு. அண்ணாதுரை அவர்களுக்கு உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியர் கூறுகையில், கடனுதவியும் மற்றும் சிறுபான்மை நலத்துறை மூலமாக மிக்சி, கிரைண்டர் மற்றும் தளவாட பொருட்கள் பெற்றுத்தருவதாக உறுதி அளித்தார்.இதில்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார்,கோபிநாதன்,மோகன், ஹாஜா சரீப்,K.A.சேக் தாவூத்,ரோஸ் (எ)காதல் ஒலி,அல்லாபாக்ஸ்,முஹம்மது ஆரிப்,முத்து (எ)சாகுல் ஹமீது,அக்பர்,தம்பிமா மற்றும் அரசு உயர் அதிகாரிகள்,காவல்துறை அதிகாரிகள்
கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments