நாகூர் தர்கா ஷரீப் 456-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா அழைப்பு


அஸ்ஸலாமு அலைக்கும் வருகிற 20-04-2013  அன்று புதன்கிழமை மக்ரிஃப் தொழுகைக்கு பிறகு விலாயத் வேந்தர்தென்னகத்து பாதுஷாவாம் ஹஜ்ரத் ஷாஹுல் ஹமீது கன்ஜே ஷவாய் கன்ஜே பக்ஸ் நாகூரி அவர்களின் 456-வது வருடாந்திர ஹந்தூரி நடைபெற இருக்கிறது அது சமயம் வருடாந்திர சந்தன கூடு வைபவத்தில் கலந்துக்கொண்டு எஜமான் அவர்களின் து.ஆபெருமாறு அன்புடன் அழைகின்றோம்..


நாகூர் தர்ஹா கந்தூரியின் விசேஷ தினங்கள்
ஜமாத்துல் அகீர் பிறை 1 2013 ஏப்ரல் மாதம் 11-ம் தேதி வியாழக்கிழமை மாலை வெள்ளிகிழமை இரவு நாகப்பட்டினத்திலிருந்து கொடி ஊர்வலம்
வந்து இரவு 9.00 மணியளவில் புனித கொடியேற்றுதல்…

ஜமாத்துல் அகீர் பிறை 9 2013 ஏப்ரல் மாதம் 19-ம் தேதி வெள்ளிகிழமை மாலை சனிக்கிழமை இரவு 10:00 மணிக்கு பீர் வைக்குதல்….


ஜமாத்துல் அகீர் பிறை 10 2013 ஏப்ரல் மாதம் 20-ம் தேதி சனிக்கிழமை மாலை ஞாயிற்றுகிழமை இரவு தாபூத்து என்னும் சந்தனக்கூடு நாகையிலிருந்து 7:00 மணியளவில் புறப்பட்டு 21.04.2013 அதிகாலை 4:30 மணியளவில் தர்கா ஷரீப் வந்தடைந்து  ஹஜ்ரத் ஆண்டவர் அவர்கள் ரவுலாஷரிபுக்கு சந்தனம் புசுதல்..

ஜமாத்துல் அகீர் பிறை 11 2013 ஏப்ரல் மாதம் 22-ம் தேதி திங்கள்கிழமை மாலை 5:00 மணிக்கு கடற்கரைக்கு பீர் ஏகுதல்….

ஜமாத்துல் அகீர் பிறை 14 2013 ஏப்ரல் மாதம் 24-ம் தேதி புதன்கிழமை மாலை வியாழக்கிழமை இரவு 8:30 மணிக்கு குர்ஆன் ஷரீப் ஹதியா செய்து புனித கொடி இறக்குதல்.

Post a Comment

0 Comments