கியாமுல் லைல் தொழுகை நிகழ்வுகள்..!

வழுத்தூரில் 5-வது ஆண்டாக தொடர் கியாமுல் லைல் தொழுகை ஆண்களுக்கும், பெண்களுக்கும் சிறப்பாக நடைபெற்றது..
வழுத்தூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற கியாமுல் லைல் தொழுகை நள்ளிரவு 2.00 மணி தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. தொழுகையினை ஹஜரத் நிஹ்மத்துல்லாஹ் அவர்கள் மற்றும்
 பெரிய பள்ளிவாசல் ஹபிஸ் அவர்கள்  இரண்டு இரண்டு ரக்அத்துகளாக மொத்தம் எட்டு ரக்அத்துகள் தொழ வைத்தனர். தொழுகை சரியாக 3.00 மணிக்கு நல்துஆவுடன் நிறைவு பெற்றது.. தொழுகையில் ஆண்கள், பெண்கள் என்று சுமார் 500 நபர்கள் கலந்துக்கொண்டனர். தொழுகை முடிந்தவுடன் அனைவருக்கும் சஹர் உணவு பரிமாரபட்டது. விழாவின் ஏற்பாடுகளை வழுத்தூர் இளைஞர்கள் செய்து இருந்தனார். விழாவின் ஏற்பாடுகளை செய்த இளைஞர்களுக்கும், பண உதவி செய்த நல்லவர்களக்கும் வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக..!

Post a Comment

0 Comments