புனித லைலத்துல் கதர் 27-ம் இரவு சிறப்பு நிகழ்வுகள்..!

வழுத்தூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரிய பள்ளிவாசலில் புனித லைலத்துல் கதர் 27-ம் இரவு தொழுகை ஆண்களுக்கும், பெண்களுக்கும் சிறப்பாக நடைபெற்றது..
வழுத்தூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றபுனித லைலத்துல் கதர் 27-ம் இரவு தொழுகை இரவு 9.30 மணி இஷா தொழுகையுடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.
தராஃபிஹ் தொழுகைக்கு பிறகு குர்ஆனை ஹத்தம் செய்து ஹாபிழ் மொளலான மொளலவி ஹாபிழ்
அவர்களுக்கு சங்கை செய்யப்பட்டது. இரவு 11:45 மணிக்கு மொளலான மொளலவி ஹாபிழ்K.நிஹமத்துல்லாஹ் மன்பஈ அவர்களின் சிறப்பு பயானும் அதனை தொடர்ந்து
இரவு 01:00 மணிக்கு தஸ்பிஹ் நபில் தொழுகை முடிந்தவுடன் ராத்திபு மஸ்லிஸ் நடைபெற்றது. அதன்பின் இரவு 02:00 மணி: கியாமுல் லைல் தொழுகை நடைபெற்றது. அதன்பின் அனைவருக்கு சஹார் உணவுக்காக பொட்டளங்கள் வழங்கப்பட்டது.
தொழுகையில் ஆண்கள், பெண்கள் என்று அனைவரும் கலந்துக்கொண்டு லைலத்துல் கதர் இரவின் சிறப்பை பெற்று சென்றனார்..




















Post a Comment

0 Comments